அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற சம்பவங்கள் ; விசாரிக்க 6 பேர் கொண்ட குழு நியமனம்!

0
60
Article Top Ad

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்காக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39(3) வது பிரிவின்படி குழுவை நியமித்தார்.

இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சின் செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

ICC T20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இலங்கையின் தேசிய கிரிக்கெட் அணி 16 அக்டோபர் 2022 முதல் 13 நவம்பர் 2022 வரை ஆஸ்திரேலியாவில் இருந்தது.

அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் உயர்மட்ட துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து தேசிய அணி வீரர்களின் நடத்தைக்கு எதிராக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை குறித்து விசாரணைகளை மேற்படி குழு மேற்கொள்ளும்.