முற்போக்குக் கூட்டணியிலிருந்து வேலுகுமார் எம்.பி. இடைநிறுத்தம்

0
61
Article Top Ad

“அரசை எதிர்த்து வாக்களிக்க தவறி, அரசுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் உடனடியாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகின்றார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையை அரசியல் குழு எடுக்கும்.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமைக் குழு சார்பாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. இன்றிரவு அறிக்கையூடாக அறிவித்துள்ளார்.