லங்கா பிரீமியர் லீக் : கிண்ணம் யாருக்கு ; ஜப்னா கிங்ஸ் – கொழும்பு ஸ்டார்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

0
83
Article Top Ad

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை ஏந்தும் முனைப்பில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி உள்ளது.

ஏற்கனவே 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த நிலையில் இம்முறையும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை ஏந்தும் ஆர்வத்தில் அணி உள்ளது.

நடப்பு தொடரை பொறுத்தவரை கண்டி பெல்கன்ஸ் அணியுடன் இரு தோல்விகளை மட்டுமே சந்தித்த லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கான முதலாவது நேரடி தகுதிப் போட்டியில் கண்டி பெல்கன்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, கொழும்பு ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

லீக் போட்டிகளில் இரண்டு முறையும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, அந்த அணியை எதிர்கொள்ளவுள்ளது.