நாய் மீது துஷ்பிரயோகம் தொடர்பில் போலி வீடியோ ; ஆஷு மாரசிங்க சிஐடியில் முறைப்பாடு!

0
58
Article Top Ad

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்கவின் காணொளி மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்

முறைப்பாட்டை பதிவு செய்துவிட்டு வெளியே வந்த பேராசிரியர் ஆஷு மாரசிங்க, தனது வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்ட காட்சிகள் என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், ஆஷு மாரசிங்க நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியதாகவும், நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவி தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், அதற்காக அவரிடம் அதிக பணம் கோரியதாகவும், இதன் காரணமாகவே இவ்வாறான பொய்யான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.