சுதந்திர தினத்தன்று மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் பலருக்கு விடுதலை! 

0
61
Article Top Ad

“சிறைச்சாலைகளில் உளவயது முதிர்ந்தோர், நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது” – என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தகவல்களும் தற்போது கோரப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைக்கு அமைய வயது முதிர்ந்தோர் மற்றும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்படுவார்கள்” – என்றார்.