உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – புதின் அறிவிப்பு!

0
76
Article Top Ad

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

உக்ரைனுக்குத் தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷியா, உக்ரைன் நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று அதிரடியாக அறிவித்தார்.

இதுதொடர்பாக அதிபர் புதின் கூறுகையில், உக்ரைன் போர் தொடர்பாக அனைத்துத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன.

உக்ரைனில் ரஷ்யா சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பிளவுபடுத்த நினைக்கின்றன. நாட்டு நலனை காக்கவும், மக்களின் நலனை காக்கவும் நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.