சென்னையில் தமிழக முதலமைச்சருக்கு ‘யாழ்’ வழங்கிய சுமந்திரன்!

0
258
Article Top Ad

தமிழக அரசின் ஏற்பாட்டில் அயலகத் தமிழர் தின நிகழ்வு சென்னையில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இலங்கை வாழ் தமிழ் மக்களின் நன்றி மறவா அன்பளிப்பாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு ‘யாழ்’ ஒன்றைப் பரிசாக வழங்கி வைத்தார்.