இலங்கையில் இரண்டு குரங்கு அம்மை நோயாளர்கள் பதிவு!

0
31
Article Top Ad

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் இருந்து வந்த இவர்களுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அசேல குணவர்தனவின் கருத்துப்படி, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய்-மகள் இருவரும் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) மருத்துவ சிகிச்சை பெற்றுவருகின்றதாக கூறியுள்ளார்.