இங்கிலாந்து-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்காக பணியாற்றிய பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு பிரதமர் பாராட்டு!

0
46
Article Top Ad

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்காக தமது பதவி காலத்தை முடிக்கும் இலங்கையக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

உயர்ஸ்தானிகர் நேற்று (ஜூன் 19) அலரிமாளிகையில் பிரதமருக்கு பிரியாவிடை வழங்கிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான இருதரப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த உயர்ஸ்தானிகரின் அயராத முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பிரதமர் கூறியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்திலும், பிரதமராக பதவி வகிக்கும் காலத்திலும் வழங்கிய ஆதரவுக்கு உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் நன்றியையும் தெரிவித்துள்ளார்.