ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயத்தின் மூலமான மிகப்பெரிய செய்தி -“த இந்து” வின் ஆசிரியர் தலையங்கம்

இருதரப்பு உறவில் தமிழர் பிரச்சனை பற்றி இந்தியா பேசுவதை விரும்பாத இலங்கை-

0
98
Article Top Ad

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்சினை தொடர்பிலான அதன் வரலாற்று ரீதியான அக்கறைகளை இந்திய அரசாங்கம் கொண்டுவருவதை இனிமேலும் கொழும்பு வரவேற்கப்போவதில்லை என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு கூறும் மிகப்பெரிய செய்தி.”

   இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப்  பத்திரிகைகளில் ஒன்றானத இந்து ‘ The Hindu இலங்கை ஜனாதிபதியின் விஜயம் குறித்து 25 ஜூலை 2023, செவ்வாய்க்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரிய தலையங்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான  பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கூட்டாக வெளியிடப்பட்டதொலை நோக்குஅறிக்கையில் எதிர்காலத்துக்கான விரிவான திட்டங்கள் குறித்து விளக்கம் தரப்பட்டிருக்கின்ற போதிலும், விக்கிரமசிங்கவின் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட எந்தவொரு எழுத்துமூல ஆவணத்திலும் வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதற்கு அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை மதிப்பதாக இலங்கையினால் முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றியோ அல்லது இந்திய மீனவர்கள் கைதுசெய்யபடுவது  தொடர்பிலான பிரச்சினை குறித்தோ எதுவும் கூறப்படவில்லை என்றுஇந்துசுட்டிக்காட்டியிருக்கிறது.

  இன்னமும் பூரணமாகவில்லை ‘ (Still Incomplete ) என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் அந்த ஆசிரிய தலையங்கம் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் தமிழர் பிரச்சினையால் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை  வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது.

    பிரதமர் மோடி மாத்திரமே தனது உரையில் அதிகாரப்பரவலாக்கம் மற்றும் மாகாணசபை தேர்தல்களின் அவசியம் குறித்தும் இலங்கையின் தமிழ் சமூகத்தின் கௌரவமும் கண்ணியமும் கொண்ட வாழ்வை உறுதிப்படுத்தவேண்டிய தேவை குறித்தும் அழுத்தமான வேண்டுகோளை விடுக்கவேண்டி யேற்பட்டது.

  ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்றத்துக்கு காரணமாக இருந்துவரும் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு அவரது அரசாங்கத்துக்குதேர்தல் ஆணைகிடையாது என்று தெளிவாகக்கூறியிருக்கிறது.

   விக்கிரமசிங்க டில்லியில் வெளியிட்ட கருத்துக்களிலோ அல்லது கூட்டு அறிக்கையிலோ இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதமையே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் மூலமான மிகப்பெரிய செய்தியாக இருக்கக்கூடும்.

   புதுடில்லி மீது வேறு விவகாரங்களுக்காக இலங்கை தங்கியிருந்தாலும் கூட, இரு்நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்சினை தொடர்பான அதன் வரலாற்றுரீதியான அக்கறைகளை கொண்டுவருவதை இனிமேலும் இலங்கை விரும்பப்போவதில்லை என்பது  உணர்த்தப்பட்டிரு்கிறது.

   இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலிமையான சகோதரத்துவ உறவுகள் நீடித்துவந்திருந்தாலும் கூட கடந்த காலத்தில் வரலாறு உறவுகளில் இடறல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு  இணக்கமான ஒரு தீர்வை உள்ளடக்காத எதிர்காலத்துக்கான எந்தவொரு நோக்கும் பூரணத்துவம் அற்றதாகவே கருதப்படும் என்றஇந்துகூறியிருக்கிறது.

மூலம் : த ஹிந்து பத்திரிகை

 

தமிழில் : வீ. தனபாலசிங்கம்- மூத்த பத்திரிகையாளர்