ஓய்வை அறிவித்த வலைப்பந்தாட்ட பிரபல்யம் தர்ஜினி சிவலிங்கம்

0
53
Article Top Ad

இலங்கையின் பிரபல்யமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

என்றாலும், வெளிநாடுகளில் தான் தொடர்ந்து வலைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 5 ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் (2009, 2012, 2014, 2018 மற்றும் 2022) போட்டிகளிலும், 4 உலக கிண்ண (2011, 2015, 2019 மற்றும் 2023) போட்டிகளிலும், பல சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்.

ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணித்தலைவியாகவும் செயற்பட்டுள்ளார்.

2011 Netball World Cup போட்டிகளில் World Best Shooter Award, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் Asian Best Shooting Award உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவர், இலங்கை சார்பில் 100 க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே வீராங்கனையாக திகழ்கிறார்.

தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ள தர்ஜினி சிவலிங்கம்,

‘எனது அன்பான இலங்கை அணி வீரர்களுடன் நான் பகிர்ந்துக்கொண்ட மகிழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் ஓய்வுபெற இது பொருத்தமான நேரமாக கருதுகிறேன்“ எனக் கூறியுள்ளார்.