சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை இந்தியா தொடரும்: ஜெய்சங்கர்

0
34
Article Top Ad

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகள் தொடருமென இந்தியா உறுதியளித்துள்ளது.

இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் காணொளி ஊடான கலந்துரையாடலின் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அனைத்து வழிகளிலும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, நாணய ஒத்துழைப்பு மற்றும் நீண்டகால முதலீடு ஆகியவற்றின் மூலம் இருதரப்பு உறவுகளும் மேலும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.