இன்னமும் இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருவதாக சிறீதரன் குற்றச்சாட்டு

0
38
Article Top Ad

கடந்த 1882ஆம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு இன்னமும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கம் மற்றும் பல்துறைசார்ந்த நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்புகள் நடைபெறுகிறது.

தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சி.

அந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் காணி அபகரிப்பு மற்றும் தமிழர்கள் பூர்வீகமாகக் கொண்ட காணிகளில் விகாரைகளை அமைத்தல் என்பனவாகும்.

இவை தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகிறேன்.

மேலும், திட்டமிட்ட அபகரிப்புக்கள் தொடர்பிலான பட்டியல் ஒன்றினை தயாரித்து வருகிறேன்.” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 1882ம் ஆண்டுக்கு பிற்பாடு தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு இன்னமும் ஒரு இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பில் பாராளுமன்றம் தவிர்ந்த ஏனைய சர்வதேச ரீதியிலான அமைப்புக்களிடமும் தாம் குரல் கொடுக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.