தனி ஆளாக போராடி இரட்டை சதமடித்த மேக்ஸ்வெல் – ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

0
44
Article Top Ad

உலக கோப்பை தொடரின் 39ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 291 ஓட்டங்களை எடுத்தது. சட்ரன் 129 ஓட்டங்களும், ரஷித் கான் 35 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து, 292 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது.

டிராவிஸ் ஹெட் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் 24 ஓட்டங்களில் வெளியேறினார். டேவிட் வார்னர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்கிலிஸ் டக் அவுட்டானார். இதனால் ஆஸ்திரேலியா அணி 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களை எடுத்து திணறியது.

லபுசேன் 14 ஓட்டங்களிலும், ஸ்டோய்னிஸ் 6 ஓட்டங்களிலும், மிட்செல் ஸ்டார்க் 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ஊட்டங்களுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி சதமடித்தார். அவருக்கு தலைவர் பாட் கம்மின்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார்.

இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 293 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 201 ஓட்டங்களுடன் ஆட்டமிலாகாது களத்தில் இருந்தார்.
ஆப்கானிஸ்தானின் நவீன் உல் ஹக், ஓமர்சாய், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.