பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

0
36
Article Top Ad

திடீர் உடல் நலக் குறைவு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 60 வயதாகும்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடிகர் போண்டா மணி நடித்துள்ளார்.

அத்துடன், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்மைய நாட்களாக அவர சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்தநிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் திடீரென் மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இததனையடுத்து குரோம்பேட்டை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.