மலையக மக்களை கௌரவித்து புதுடெல்லியில் வெளியிடப்பட்டது நினைவு முத்திரை

0
31
Article Top Ad

மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமை முன்னிட்டு அவர்களின் “உழைப்பை” அங்கீகரிக்கும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் வழிகாட்டலில், தமிழ்நாடு பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அண்ணாமலையின் ஏற்பாட்டில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நினைவு அஞ்சல் முத்திரையொன்று இன்று புதுடெல்லியில் வெளியிட்டப்பட்டது.

இம்முத்திரையை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஜே.பி.நட்டாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், வீரகேசரி பத்திரிக்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், GOPIO தலைவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவி அனுசியா சிவராஜா, பிரதி தலைவர் கணபதி கனகராஜ், பிரதி தாவிசாளர் ராஜதுரை, தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஸ்ட ஆலோசகர் மதியுகராஜா இ.தொ.காவின் உப தலைவர்களான சிவஞானம், பிலிப் குமார், அசோக் குமார், பாஸ்கர், பிரதி பொது செயலாளர் செல்லமுத்து உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.