நிகழ்நிலை காப்புச்சட்டம் தொடர்பான உரையாடல்களால் உண்மையான தீர்வு காணமுடியுமா?: ஜூலி சங் கேள்வி!

0
18
Article Top Ad

இலங்கை அரசாங்கத்தின் நிகழ்நிலை காப்புச்சட்டம் தொடர்பில் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டமூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பரந்த வரையறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழித் தாக்குதல்கள் போன்ற செயல்களை எதிர்த்துப் போராடும் நோக்கத்தில் உள்ளன, ஆனால் முறையான வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த தவறாகப் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கவலை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச சமூகம் மட்டுமன்றி நாட்டின் பிரஜைகளின் தேவைகளுக்கு செவிசாய்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிகழ்நிலைக் காப்புச்சட்டம் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான செயல்முறை, உள்நோக்கம் மற்றும் பேச்சு சுதந்திரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்தி, நிகழ்நிலைக் காப்புச்சட்டம் குறித்து அவர் தீவிர கவலைகளை வெளிப்படுத்தியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் இருப்பதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தை திருத்துவதற்கான செயல்முறை நடந்து கொண்டிருக்கும் வேளையில், சட்டத்தின் சாத்தியமான தாக்கம் குறித்த இணைய உரையாடல் உண்மையான தீர்வுகளைக் காணுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.