நேட்டோ படையில் சுவீடன் இணைந்தது

0
23
Article Top Ad

நேட்டோ படையில் சுவீடன் இன்றைய தினம் அமெரிக்காவின் தலைநகர் வொசிங்கடனில் இணைந்துள்ளது. ரஷ்யா, உக்ரையன் மீது போர் தொடுத்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில், சுவீடன் ஸ்கெ தேசிய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு நேட்டோ கூட்டணியில் இணைந்துள்ளது.

சுவீடன் பிரதமர் உல்ப் கிரிஸ்டர்சன் இறுதி ஆவணத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைந்திருந்தார்.

இராணுவ கூட்டணியில் உள்ள ஏனைய நாடுகளின் அனுமதியினைப் பெறுவதற்கு சுவீடன் பேச்சுக்களில் கலந்து கொண்டிருந்தது.

துருக்கி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் சுவீடனின் இணைவு குறித்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.