தேர்தல் விதிமுறைகளை மீறினாரா விஜய்?

0
37
Article Top Ad

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆரம்பமான நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நேற்று(19)ஒரே கட்டமாக தேர்தல் இடம்பெற்றது.

இதன்போது, அரசியல் பிரமுகர்கள்,திரையுலகினர் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றிருந்தார்.

இதன்போது மக்கள் கூடியதையடுத்து விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்துள்ளார்.

இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் முறைப்பாடளித்துள்ளார்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில்,சுமார் 200 இற்கும் மேற்பட்டோருடன் தேர்தல் விதிமுறைகளை மீறி விஜய் வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here