ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் நாடு திரும்பினர்!

0
28
Article Top Ad

நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் ஜூன் மாதம் ஆரம்பிக்கவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்துக்கான விசாவைச் செயல்படுத்த நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, நுவான் துஷார ஆகியோர் ‍அமெரிக்காவுக்கான விசாவை செயல்படுத்த கொழும்புக்கு வந்துள்ளனர்.

அவர்கள் எப்போது மீண்டும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு திரும்புவார்கள் என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.

எதிர்வரும் T20 உலகக் கிண்ணத்துக்கான அமெரிக்க விசாவைப் பெற்ற பிறகு கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஐ.பி.எல். போட்டிகளுக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு தேசிய அணியை தயார்படுத்தும் வகையில், இலங்கை கிரிக்கெட் 3 அணிகள் கொண்ட T20 பயிற்சி போட்டியை இன்று ஆரம்பிக்கவுள்ளது.

மஞ்சள், பச்சை, சிவப்பு என மூன்று அணிகள் போட்டியில் பங்கேற்கும்.

ஒவ்வொரு அணியிலும் 14 வீரர்கள் உள்ளனர். ஹசரங்க, அசலங்க, ஜனித் லியனகே ஆகியோர் அணிகளின் தலைவர்களாவர்.

அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.