“மகேந்திர சிங் தோனி என் தந்தை போன்றவர்“: பத்திரன

0
26
Article Top Ad

“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி, தன்னை ஒரு தந்தையாக அடிக்கடி வழிநடத்துவார்“ என மத்திஷா பத்திரன கூறுகிறார்.

சென்னை அணியின் யூடியூப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எனது தந்தைக்குப் பிறகு, எம்.எஸ் தோனி தனது கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.“

இந்த வாய்ப்பை வழங்கிய தோனிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பத்திரன நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய மத்திஷ பத்திரன நடப்பு ஐ.பி.எல் இல் முக்கிய வீரராக விளையாடி வருகிறார்.

அதற்கு இவரது பந்துவீச்சு திறனும் ஒரு காரணம். சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் கனவு இளவரசனாகவும் மாறிவிட்டார் மத்திஷ பத்திரன.

இதேவேளை, அண்மையில் கிரிக்கெடை பிடிக்காத ஏஞ்சலா என்ற பெண் ஐபிஎல் போட்டிகளை பார்க்க வந்துள்ளார்.

அங்கு அவர் பதிவிட்ட கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“கிரிக்கெட் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. பத்திரனவை பார்க்கவே வந்தேன்“ என ஏஞ்சலா தெரிவித்திருந்தார்.

பத்திரிக்கையாளர் – கிரிக்கெட்டில் பத்திரன என்று ஒருவர் இருக்கிறார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு ஏன் அவரை பிடிக்கும்?

ஏஞ்சலா – ரீல்ஸில் (Reels) பார்த்தேன். எனக்கு அவரை பிடிக்கும். மிகவும் அழகானவர். அவரைப் பார்க்கவே வந்தேன். அங்கு செல்கிறார், இங்கு செல்கிறார். ஆனால், நான் இருந்த இடத்திற்குதான் வரவில்லை.

பத்திரிகையாளர் – அவர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார், இல்லையா?

ஏஞ்சலா – பார்த்தேன். அந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பின்னர் அவரை என்னிடம் அழைத்துவந்தனர். பத்திரனவை எனக்கு பிடிக்கும். நான் இலங்கைக்கு செல்ல எண்ணியுள்ளேன்.

பத்திரிக்கையாளர் – அங்கே குடியேறப் போகிறீர்களா?

ஏஞ்சலா – நீங்கள் விரும்பினால், நீங்களும் குடியேறலாம்.

இவ்வாறு அந்த ஏஞ்சலா தமது மனதில் உள்ள விடயங்களை பகிர்ந்துக்கொண்டார்.