பிரித்தானியாவிற்கு யுத்த எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்யா: ரஷ்ய அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்ட பித்தானிய தூதர்

0
14
Article Top Ad

பிரித்தானியா மீது தாக்குதல் உறுதி என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, பிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தினால் பிரித்தானியா பாரிய விளைவுகளை சந்திக்கும் எனவும் ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த வாரம் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன், ரஷ்யாவை தாக்க, பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு உரிமை உண்டு என, கூறியிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்திற்கு, பிரித்தானிய தூதர் நைஜல் கேசி அழைக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

தூதர் நைஜல் கேசியின் அழைப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிரித்தானியா, ரஷ்ய அதிகாரிகளுடன் உத்தியோகப்பூர்வ சந்திப்புக்களை மட்டுமே நைஜல் கேசி முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியாவின் தொலை தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தாது என்ற நிலைப்பாட்டுக்கு எதிராக பிரித்தானியா செயல்படுவதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுடன் பிரித்தானியாவும் தற்போது போரில் களமிறங்கியுள்ளதை பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

டேவிட் கேமரூன் கூறிய கருத்துகள் இந்த போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகவே கருதப்படும் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here