செல்ஃபி எடுத்த ரசிகரை தாக்கிய சகீப் அல் ஹசன்

0
20
Article Top Ad

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரராக விளங்குபவர் சகீப் அல் ஹசன்.

தற்போது பங்களாதேஷின் உள்ளூர் லீக் தொடரான (டாக்கா பிரீமியர் லீக் – Dhaka Premier League-DPL) தொடரில் விளையாடி வருகின்றார்.

இவர் குறித்த போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலின் இடைநடுவில் மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் சகீப் அல் ஹசனுன் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுக்க முயன்றபோது, சகீப் அல் ஹசன் அந்த ரசிகர் மீது கோபப்பட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கவும் முயன்றுள்ளார்.

இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளதுடன் சகீப் அல் ஹசன் மீது எதிர்மறையான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

சகீப் அல் ஹசன் இதற்கு முன்னரும் கோபத்தில் மேற்கொண்ட சில செயற்பாடுகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here