தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி துண்டுப்பிரசாரம்: கஜேந்திரன் எம்.பி. கைதாகி விடுதலை

0
12
Article Top Ad

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கஜேந்திரன் எம்.பி., இன்று கிளிநொச்சியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளார்.

இவ்வாறு துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பது தேர்தல் சட்டத்துக்கு முரணானது என்ற காரணியின் கீழ் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here