வரி குறைப்பு: நாளை வாஷிங்டன் பறக்கிறது இலங்கை தூதுக்குழு

0
87
Article Top Ad

இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பை மேலும் குறைத்துக்கொள்வதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் இரு தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

” இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இலங்கை தூதுக்குழு நாளை 18 ஆம் திகதி மீண்டும் வாஷிங்டன் புறப்படுகின்றது. இரு தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்குரிய பேச்சு இடம்பெறுகின்றது. அது சாதகமாக முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 44 சதவீத வரியை விதித்தது. எனினும், இலங்கை மேற்கொள்ள இராஜதந்திர பேச்சுகளின் பயனாக அது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

அந்த தொகையையே மேலும் குறைத்துக்கொள்வதற்குரிய முயற்சியே தற்போது இடம்பெற்றுவருகின்றது.