இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை காசா நகரை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பை தோற்கடிக்கவோ, கடத்தப்பட்டவர்களை மீட்கவோ முடியாது என்று பெரும்பாலான அமைச்சர்கள் நம்பியதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை இதை பேரழிவுக்கான காரணமாக கருதி கடுமையான எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கை காசாவில் உள்ள பணயக்கைதிகளுக்கு எதிரான ஆபத்துக்களை உருவாக்கக்கூடும் என்பதையும் தெரிவித்துள்ளது.
தற்போது, காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள், பிரதேசத்தில் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களின் இடையே இஸ்ரேல் இந்த திட்டத்தை முன்னெடுக்கிறது.
நெதன்யாகுவின் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் விளக்கப்படுகின்றன. அதன்படி, ஹமாஸ் அமைப்பை நிராயுதமாக்கி, காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும், உயிருடன் உள்ளவர்களையும் திரும்ப அனுப்புவதே இதில் உள்ள முக்கிய நோக்கமாகும் என தெரிவித்துள்ளது.
மேலும், காசா பகுதியை முழுமையாக இராணுவ மயமாக்கி, இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் திட்டமும் இதில் அடங்கியுள்ளது. இதனுடன், ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதிகார சபைக்கு மாற்றாக ஒரு புதிய சிவில் அரசாங்கத்தை அமைப்பது திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த திட்டம், இஸ்ரேல் அமைச்சரவையின் பெரும்பான்மையினால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

