ஜப்பான் வர்த்தக தலைவர்களை சந்தித்தார் அநுர

0
23
Article Top Ad

ஜப்பான்-இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளில் ஒரு புதிய வழியை திறக்கும் வகையில் ஜப்பான் வர்த்தக அமைப்பின தலைமையகத்தில் நடைபெற்ற ஜப்பான்-இலங்கை வர்த்தக மன்ற கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டார்.

இந்தக் கலந்துரையாடலில் JETROவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இஷிகுரோ நோரிஹிகோ (Ishiguro Norihiko) மற்றும் ஜப்பான்- இலங்கை வணிக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவரும் ITOCHU கார்ப்பரேஷனின் தலைவருமான ஃபுமிஹிகோ கபயாஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வின் போது, ​​இலங்கையில் கிடைக்கும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் மோசடி மற்றும் ஊழலை ஒழித்து முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.

இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளிகளில் ஒன்றான இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இது இரண்டு நாடுகளுக்கும் அத்தகைய ஒத்துழைப்பை கொண்டு வரும் பரஸ்பர நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.