இலங்கை–அவுஸ்திரேலியா இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

0
91
Article Top Ad

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு முயற்சியின் தொடர்ச்சியாக, இலங்கை அரசாங்கம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று (27) நிதி அமைச்சில் இருதரப்புக் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும கையொப்பமிட்டார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் சார்பில் லங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெத்திவ் டக்வர்த் (Matthew Duckworth) கையொப்பமிட்டார்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும், பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறை சரியான நேரத்தில் முடிக்க இலங்கை அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது.

ஒப்பந்தங்கள் மூலம் மொத்த சுமார் 39 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைக்கப்படவுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்போல், நிலுவையில் உள்ள கடன்களை மறுசீரமைப்பதன் மூலம் அவுஸ்திரேலிய அரசு இலங்கைக்கு கடன் நிவாரணம் வழங்க ஒத்துழைத்துள்ளது.

இந்த இருதரப்புக் ஒப்பந்தங்கள், இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மைக்கான பயணத்தில் முக்கிய பங்களிப்பை வழங்குவதோடு, இலங்கை–அவுஸ்திரேலியா இடையிலான ஆழமான மற்றும் நீண்டகால உறவுகளை மேலும் பலப்படுத்துகின்றன. அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் இலங்கை அரசாங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.