Article Top Ad
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த கடுமையான குளிர் காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்து நிலைமை ஏற்படக்கூடும் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

