இந்தியா – பாகிஸ்தான் நாளை பலபரீட்சை

0
23
Article Top Ad

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா அணி நேற்று மாலை இலங்கையை வந்தது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வீரர்களுக்கு அங்கு குழுமியிருந்த ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியுடன் 41 பேர் கொண்ட குழுவும் இலங்கை வந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, நானை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அரசியல் காரணங்களால் பாகிஸ்தான் இப்போட்டியைப் புறக்கணிக்கவிருந்த போதிலும், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கிணங்க, திட்டமிட்டபடி இப்போட்டியில் பங்கேற்கப் பாகிஸ்தான் இணக்கம் தெரிவித்தது.

அதன் பிரகாரம் இரு அணிகளும் நாளை மோத உள்ளதுடன், இன்றைய தினம் தீவிர பயிற்சியில் இரு அணிகளும் ஈடுபட உள்ளன.

இதேவேளை, டி20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போட்டிகள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதற்கான முழுமையான பாதுகாப்பு கட்டமைப்பை அமுல்படுத்தியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

போட்டி  நடைபெறும் மைதானங்கள், அணிகல் தங்கியிருக்கும் ஹோட்டல்கள், பயிற்சி தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் ரசிகர் மையங்களில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.