தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியின் ஆட்சியே அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், சட்டப்பேரவையின் நிறைவு நாள் கூட்டத் தொடர் நேற்று இடம்பெற்றது.
இதில் உரையாற்றும் போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மு.க.ஸ்டாலின், மீண்டும் திமுகவின் ஆட்சி மலர்வது உறுதி. தமிழக மக்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ எனவும் குறிப்பிட்டார்.
5 ஆண்டு அனுபவத்தால் இன்னும் வலிமை பெற்றுள்ளேன். தமிழகத்தை இன்னும் ஏற்றம் பெற வைக்க நம்பிக்கையோடு உழைக்க ஊக்கமும், வல்லமையும் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் எனது தொகுதியாகவே நினைத்து, எங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று பிரித்துப் பார்க்காமல் செயலாற்றி உள்ளேன். இந்த மிகப் பெரிய வாய்ப்பைத் தந்த தமிழக மக்கள், என்னைத் தேர்ந்தெடுத்து பே

