ஓமன் கடல் அமெரிக்கா கைப்பற்றியுள்ள ஈரான் கப்பலில் ஆபத்தான இரசாயனங்கள்

0
5
Article Top Ad

ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கா கைப்பற்றியுள்ள ஈரான் கப்பலில் ஆபத்தான இரசாயனங்கள் இருப்பதாகவும், இது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

‘MV Touska’ என்ற ஈரானிய சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி சிறைப்பிடித்தது .
இந்த கப்பல் சீனாவிலிருந்து ஈரான் நோக்கிச்சென்றதாகவும், அதில் ஏவுகணைகளுக்கான வேதிப்பொருள்கள் இருந்ததாகவும் அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவரான நிக்கி ஹேலி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேநேரம் அமெரிக்க அதிகாரிகள் இந்த கப்பலில் இருந்த இரசாயனங்களை ‘Dual-use’என குறிப்பிடுகின்றனர். இவை உரம் தயாரிப்பதற்கோ அல்லது பெயிண்ட் தொழிற்சாலைகளுக்கோ பயன்படுத்தப்படலாம் என்றும், இவற்றைச் சுத்திகரிப்பதன் மூலம் ஏவுகணைகளுக்கான வெடிபொருள்களாகவும் மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில், அம்மோனியம் பெர்குளோரேட், ஹைட்ராசின் மற்றம் பாலீமர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

இதில், ஹைட்ராசின் என்பது திரவ எரிபொருள் ஏவுகணைகளில் உந்துசக்தியாகப் பயன்படுத்தப்படும் இரசாயன வகை என்றும் கூறப்படுகின்றது.

ஈரான், சாதாரண மக்கள் பயன்பாட்டுக்காக இந்த பொருள்களை இறக்குமதி செய்வதாகக் கூறிக்கொண்டு, சீனாவின் உதவியுடன் மறைமுகமாகத் தனது பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தை வலுப்படுத்துகிறது என அமெரிக்காவின் குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலியின் குற்றம் சாட்டியுள்ளார் .

இதேவேளை ஈரான் இதனை முழுமையாக மறுத்துள்ளதுடன், கப்பலில் வந்த சரக்கு அனைத்தும் தொழில்துறை சார்ந்த மூலப்பொருள்கள் மாத்திரமே என விளக்களித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here