ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக வழக்கு தாக்கல்!

0
180
Article Top Ad

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அவர் அமைச்சராக இருந்தபோது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு 8,465,000 ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.