வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு?

0
295
Article Top Ad

 

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகத் தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்தும் விடயம் தொடர்பான நடைமுறைகளும் இறுக்கமாகக் கடைபிடிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உலக நாடுகளில் கொரோனாத் தொற்றின் மூன்றாம், நான்காம் அலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் விமானப் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் 1593 பேரும், ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இதுவரை 500 இற்கும் அதிகமானவர்களும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையைக் கருத்தில்கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது” – என்றார்.