இந்திய தூதுவரை சந்தித்த சபாநாயகர்

0
251
Article Top Ad

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (07) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது மற்றும் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு இந்திய அரசாங்கம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்திருந்ததுடன், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.