சீனாவின் ஆக்கிரமிப்பால் சிங்களவர்களிடையே கிளர்ச்சி வெடிக்கும்! – சபையில் சாணக்கியன் எம்.பி. எச்சரிக்கை

0
386
Article Top Ad

இலங்கையில் பெருகிவரும் சீன ஆக்கிரமிப்புகளால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்துக்கிடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகலாம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சபையில் இன்று தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பலவீனமுற்றுள்ள அரசு அதிகாரத்தைக் கையில் எடுக்கும் நோக்கத்தில் மீண்டும் ஒரு சமூகத்துக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டலாம்.

இலங்கை குறித்து வெளிநாட்டவர் மத்தியில் நல்லதொரு எண்ணப்பாடு இருந்தாலும், இலங்கையர்கள் சக இலங்கையர்களுடம் அன்பாக இருப்பதில்லை.

காலத்துக்குக் காலம் மலையக இலங்கையர்கள், தமிழர்கள், பறங்கியர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தேசிய ரீதியல் தமிழர்கள் கல்வி கற்க முடியாத, விவசாயம், ஏனைய வியாபாரங்களில் ஈடுபட முடியாத நிலைமை உருவாக்கப்பட்டது. அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி, இன்று வெவ்வேறு நாடுகளில் நல்ல நிலைமையில் உள்ளனர்.

இதனிடையே, முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. பெரும்பான்மை சமூகத்தை அவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டன.

முஸ்லிம்கள் தொடர்ச்சியாக நெருக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, அவர்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்ற காரணத்தால்தான் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலும் இடம்பெற்றது” – என்றார்.