யாழில் கொரோனாத் தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்ன?

0
379
Article Top Ad

“யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டமைக்கு வர்த்தகர்களும், மக்களும் உரிய முறையில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமையே பிரதான காரணமாகும்.”

– இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில், இலங்கை மக்களின் நடத்தைகளைப் பொறுத்தே நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காலத்தில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து இலங்கை மக்களுக்கு சிறந்த புரிதல் உள்ளது.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சரியான சுகாதார வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

அத்தோடு புத்திசாலித்தனமான இலங்கை மக்கள் இந்த சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்றவாறு செயற்படுவார்கள் என்று நம்புகின்றோம்.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண நாடெங்கும் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்” – என்றார்.