இன்று மட்டும் 1,531! இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 8,434 பேருக்குக் கொரோனா!

0
203
Article Top Ad


இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 8 ஆயிரத்து 434 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதாவது சராசரியாக தினமும் 1,049 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று தொடர்ந்து மூன்றாம் நாளாகவும்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்தத்  திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதன்முதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட (1,111) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 1,466 தொற்றாளர்களும் இன்றையதினம் இதுவரையில் 1,531 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தின் பின்னர் கொரோனாத்  தொற்றாளர்களின் தொகை சடுதியாக அதிகரித்துவரும் நிலையில் தற்போது 9 ஆயிரத்து 209 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.