பாதுகாப்பு அமைச்சரைத் தொடர்ந்து இலங்கை வருகிறார் சீன வெளி நாட்டமைச்சர்

0
256
Article Top Ad

 

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் இலங்கைக்கு விஜயம் செய்த கையோடு அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடன் பேச்சு நடத்திய அதேவேளை, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் வாங் தன்னுடைய பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

கடந்த வாரம் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றில் அவர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் கொரோனாவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து அவர் உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.