அவசியத்தைப் பொறுத்து எந்நேரமும் நாடு முடக்கப்படலாம்- அரசு அறிவிப்பு

0
478
Article Top Ad

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசியத்தைப் பொறுத்து நாடு எந்த நேரமும் முடக்கப்படலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

“நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளதால் பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது அல்லது நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் இன்று மாலை வேளையில் கூட எடுக்கப்படலாம்.”

–  இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அந்தந்த பிரதேசங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கப்படும்.

எதிர்வரும் நிலைமையைக் கருத்தில்கொண்டு பயணக் கட்டுப்பாடுகள் அல்லது நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் இன்று மாலை வேளையில்கூட எடுக்கப்படலாம். இருப்பினும், தற்போது காணப்படும் நிலையில் ஊரடங்கு அவசியமற்றது.

எனினும், ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள் அரசு வந்துள்ளது” – என்றார்.