2வது போட்டியில் சூர்யா ,பிரத்வி ஷா, ஹார்டிக் பாண்டியா, இஷான், குருணால் இல்லை! இலங்கை கிரிக்கட்டை இந்தியாவிடமிருந்து காப்பாற்றிய கொரோனா?

0
262
Article Top Ad

இலங்கையில் கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியிடம் டி20 தொடரையும் இலங்கை இழந்துவிடுமோ என அஞ்சிய ரசிகர்களுக்கு முக்கிய  இந்திய வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை ஆறுதலை அளித்துள்ளதை சமூக வலைத்தள பின்னூட்டங்களில் அவதானிக்க முடிகின்றது.

டி20 தொடரில் முதலாவது போட்டியில் தோல்விகண்ட இலங்கை அணி நேற்றையதினம் 2வது போட்டியை எதிர்கொள்ள இருந்தது.

எனினும் இந்திய சகலதுறைவீர் குருணால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் போட்டி இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.

அத்தோடு குருணால் பாண்டியாவுடன் நெருக்கமாக இருந்த எட்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர்கள் இன்றைய போட்டியிலும் நாளை திட்டமிடப்பட்டுள்ள 3வது போட்டியிலும் களமிறங்க மாட்டார்கள் என அறிவிப்பட்டது.

குருணாலுடன் நெருக்கமாக இருந்த வீரர்கள் யார் என்ற விபரத்தை தற்போது இந்திய ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன.

சூர்யகுமார் யாதவ் ,பிரத்வி ஷா, ஹார்டிக் பாண்டியா, இஷான் கிஷான் ,தேவ்தத் படிக்கல் ,கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரே குருணாலுடன் நெருக்கமாக இருந்த வீரர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இன்றைய போட்டியிலும் நாளையும் விளையாடமாட்டார்கள் . இந்த வகையில் கடந்த பத்து டி20 போட்டிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றிபெற்று தரவரிகையில் கீழ்மட்டத்திலுள்ள இலங்கை அணிக்கு பெரும் வாய்ப்பை வழங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை .

2009ம் ஆண்டு முதல் இலங்கையும் இந்தியாவும் மொத்தமாக ஏழு டி20 தொடர்களில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 6 முறை வெற்றிபெற்றுள்ளதுடன் மற்றைய தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.