இலங்கையில் தொடர்ந்து 3வது நாளாக 100க்கு அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவு

0
210
Article Top Ad

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 124 மரணங்கள் நேற்று (10) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றுடன் சேர்ந்து கடந்த மூன்று நாட்களாக தினமும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்துள்ளது

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,340 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 124 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை 5,464 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 124 பேரில் 75 பேர் ஆண்கள் 49 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்றைய தினம் (11) 2,890 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.