ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 1,112 பேர் கொரோனாவால் உயிரிழப்பு : பேரழிவை நோக்கி இலங்கை ?

0
218
Article Top Ad

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 156 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று உறுதிசெய்யப்பட்ட உயிரிழப்புக்களுடன் சேர்த்து இந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 1,112 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 5,464 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள

156 மரணங்களுடன் இலங்கையில் இதுவரை 5,620 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 156 பேரில் 87 பேர் ஆண்கள் 69 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒகஸ்ட் 8ம் 9ம் 10ம் திகதிகளில் நாளாந்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியிருந்த நிலையில் ஒகஸ்ட் 11ம் திகதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐத் தாண்டியுள்ளது.

இதேவேளை மே மாதத்திற்கு பின்னர் முதற்தடவையாக இன்றையதினம் முதற்தடவையாக ஒரே நாளில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000ஐத் தாண்டியுள்ளது.