Lockdownஐ நீக்கினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 16,000ற்கு அதிகமாக அதிகரிக்கும்! 21,000 கோடி ரூபா பொருளாதார இழப்பு ஏற்படும்

0
227
Article Top Ad

தற்போது நடைமுறையிலுள்ள பொதுமுடக்கத்தை (Lockdownஐ) எதிர்வரும் ஓகஸ்ட் 30ம் திகதி திங்கட்கிழமை முதல் நீக்கி அதன்பின்னர் படிப்படியாக தளர்வுகளை முன்னெடுக்கத் தீர்மானிக்குமிடத்து இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 16,700 ஆக அதிகரிப்பதற்கு வழிகோலும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பீடுசெய்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ஓகஸ்ற் 30ல் முடக்கம் நீக்கப்பட்டால் அதனால் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் 1.3பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதாவது 21,000 கோடி ரூபாவாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தை செப்டம்பர் 18ம் திகதிவரை நீடித்தால் உயிரிழப்புக்கள் 13,712 ஆகவும் பொருளாதார தாக்கம் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமையும். இதுவே ஒக்டோபர் 2ம் திகதிவரை பொதுமுடக்கத்தை நீடித்தால் உயிரிழப்புக்கள் 10,400 ஆகவும் பொருளாதார தாக்கம் 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அமையும் என இந்த ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“Epidemiological and Economic Projections of Mitigation Measures for the Covid-19 Pandemic in Sri Lanka’s Roadmap” அறிக்கையில் முன்வைக்கப்பட்ட இந்த மதிப்பீடு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நேற்று( 26.08.2021) நடத்தப்பட்ட மெய்நிகர் கருத்தரங்கின் போது வெளியிடப்பட்டது.

இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில் முதற்தடவையாக நாட்டில் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ நேற்றுத்தாண்டியது. 209 கொவிட் மரணங்கள் நிகழ்ந்ததாக சுகாதார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.

கடந்த 20 நாட்களில் மாத்திரம் 3200ற்கு அதிகமானவர்கள் இலங்கையில் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.