எரிபொருள் விலை அதிரடியாக அதிகரிப்பு!

0
148
Article Top Ad

 

இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது எனப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, ஒரு லீற்றர் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக (20 ரூபாவால்) அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக (23 ரூபாவால்) அதிகரித்துள்ளது.

ஒடோ டீசல் ஒரு லீற்றரின் விலை 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக (10 ரூபாவால்) அதிகரித்துள்ளதுடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக (15 ரூபாவால்) அதிகரித்துள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக (10  ரூபாவால்) அதிகரிக்கப்பட்டுள்ளது