சீன வெளிவிவகார அமைச்சர் விஜயம் தொடர்பாக அதிக எதிர்பார்ப்புகளுடன் இலங்கை

0
183
Article Top Ad
ஜனவரி 8 ,9 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயம், கடுமையான டொலர் தட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீடு இல்லாமை , சர்வதேச ரீதியில் நிதி தரநிர்ணய வீழ்ச்சியை நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்குகின்ற இக்கட்டான நிலையில் இருக்கும் போது நிகழ்கிறது .
நெருக்கடியிலிருந்து இருந்து பெய்ஜிங் வெளிவர உதவும் என்று கொழும்பு எதிர்பார்க்கக்கூடும் .
சீனாவுக்கு இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் கருதி, வாங் யீ முதலீடுகளுக்கான பல முன்மொழிவுகளை முன்வைப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கோஹண , வாங்கின் விஜயத்தைத் தொடர்ந்துபெரிய அளவிலான சீன முதலீடுகள் பல இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக சனிக்கிழமை தெரிவித்திருந்தார் .
சீனாவால் நிர்மாணிக்கப்படுகின்ற 1.4 பில்லியன் அமெரிக்க டொ லர் மதிப்புள்ள கொழும்பு துறைமுகநகரில் (சி பி சி ) முதலீடுகள் இருக்குமா என்று கேட்டதற்கு, இரண்டு அல்லது பெரிய சீன நிதி நிறுவனங்கள்கொழும்பு துறைமுகநகரில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாககலாநிதி கோஹண கூறியுள்ளார் .
கொழும்பு துறைமுகநகர் ஒரு நிதிகேந்திரமாக இருக்கும், தொழில்துறை கேந்திரமாக இருக்காது.
ஏனைய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்கு , சீன நிறுவனங்கள் முதலில் முதலீடு செய்ய வேண்டும்.கொழும்பு துறைமுகநகரம் என்றும் அழைக்கப்படும் நிதி நகரம், கொழும்பு துறைமுகத்திற்கு தெற்கே கடலில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மீது அமையவுள்ளது.
நிலம் தயாராக உள்ளது, ஆனால் முதலீடுகள் மற்றும் கட்டிடங்கள் இன்னும் கோவிட் -19 காரணமாகவும், ஓரளவு உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டு சூழல் காரணமாகவும் வரவில்லை.
நீண்ட காலத்திற்கு முன்பே கடலில் இருந்து தேவையான நிலத்தை உருவாக்கிய சீனர்கள் கொழும் பு துறைமுக நகரின் முதலீட்டு பகுதியை துரிதமாக தொடங்குவதில் ஆர்வமாக உள்ளனர். முன்னதாக, கடந்த வாரத்தில், சீன அதிகாரிகளின் அழைப்பின் பேரில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்,கொழும்புத்துறைமுகநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கொழும்புத்துறைமுக நகருக்கு இலங்கை அரசாங்கம்அண்மையில்தான் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தது .. இலங்கையின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதி களுக்கு அமைவாக கட்டமைப்பை மேற்கொள்ளப் பட வேண்டியிருந்தது. கட்டமைப்பு உருவாக்கப்பட்ட பிறகும் இடையூறுகள் காரணமாக அது சரியாக இயங்கவில்லை.
இந்தத் திட்டத்தில் சீனப்பங்காளி குறுக்குவழியை முயற்சித்தபோது, ​​ஒருபுறம் துறைமுகநகர ஆணைக்குழுவின் தலைவருக்கும், மறுபுறம் ஜனாதிபதியின் செயலாளருக்கும், சீன நிறுவனத்துக்கும் இடையேகள மோதல் ஏற்பட்டது.
கெ ரவெலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில்சீனாவின் ஆர்வம்
கெரவெலபிட்டிய அனல்மின் நிலையத்தின் அரசாங்கத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமான நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி (என் எவ் ஈ ) க்கு விற்பனை செய்தமை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்படாவிட்டால், சீன மின் உற்பத்தியாளர்கள் இந்த திட்டத்தில் கேள்வி மனு கோரலில் ஈடுபடலாம் என தூதுவர் கோஹண சுட்டிக்காட்டியுள்ளார் .
2021 செப்டம்பரில், கெரவெலப்பிட்டியவில் உள்ள 300 மெகாவாட் யுகத னவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான பங்குகளை என் எவ் ஈ க்குமாற்றுவதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. திறைசேரிக்கு (நிதி அமைச்சு) சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை என் எவ் ஈக்கு மாற்ற நிதி அமைச்சு இணங்கிக் க்கொண்டது.
இந்த பரிவர்த்தனையின் மூலம், திறைசேரிக்கு கிட்டத்தட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இலங்கைக்கு இயற்கை எரிவாயு வழங்கும் உரிமையையும் என் எவ் ஈபெறும்.
ஆனால் அந்த ஒப்பந்தம் சர்ச்சைக்குள்ளானது. தேசியவாதகருத்தாடல் அதற்கு எதிராக இருந்தது. அதுவும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக முன்வைக்கப்படவில்லை. எனவே இந்த ஒப்பந்தத்தைஇ ரத்து செய்யக்கோரி 3 அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட பலர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
ஆனால், கடந்த ஒன்றரை வருட காலகோவிட் -19 தொற்றுநோய்களின் போது பொருளாதார நடவடிக்கைகள் இடைநிறுத்தம் அல்லது இடையூறு ஏற்படுத்தியதன் விளைவாக மிகவும் பற்றாக்குறையாக இருக்கும் டொ லர்களைப் பெறுவதற்கு இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள்அதிகளவுக்கு தேவைப்படுகின்றன.
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு நவம்பர் மாதத்தில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்தது, அதாவது ஒரு மாத இறக்குமதிஐகானை தொகையாகும்.. இலங்கை முதலில் ஆண்டு இறுதிக்குள் 3.5 பில்லியன் அமெரிக்க டொ லர் இருப்புக்களை இலக்காகக் கொண்டிருந்தது.
முதலீடு செய்யவும், நிதி உதவி செய்யவும், கடன் தள்ளுபடி செய்யவும் அனைத்து முக்கிய நாடுகளுக்கும் இலங்கை வேண்டுகோள் விடுத்து வருகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தார், இந்தியா ஒரு விரிவான பொதியை உருவாக்கி வருகிறது. ஆனால் அதன் பங்கில், இலங்கை இந்திய முதலீடுகளை எளிதாக்கும், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள திட்டங்களை செயற் படுத்த உதவும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
எவ்வாறாயினும், சீனாவின் உதவி முக்கியமாகும், ஏனெனில் சீனர்கள் அதிக நிதிவளங்களை கொண்டுள்ளனர் இலங்கையில் அவர்களின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைத் தொடர்வதற்காக தங்கள் பணப்பையை தளர்த்த தயாராக உள்ளனர். வேறு சில நாடுகளின் முதலீடுகளை சந்தேகத்துடன் பார்க்கும் இலங்கை தேசியவாத தரப்பின் எதிர்ப்பு இல்லாததால், , இலங்கை அரசாங்கங்கள் சீனா வின் உதவிகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
இதன் மூலம் இலங்கையில் அதிக முதலீடு செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. 2021மே 1, இல் த டிப்ளோமற் றி ல் , இலங்கையின் பொருளாதார நிபுணர் உமேஷ் மொரமுதலி, சீன-இலங்கை பொருளாதார உறவு, கடன், முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகிய மூன்று முக்கிய வழிகளில்செழிப்படையும் விதத்தில் வளர்கிறது என்று கூறுகிறார்.
அரச கடனைப் பொறுத்தவரையில், கடந்த ஒன்றரை தசாப்தங்களாக, இலங்கைக்கு வெளிநாட்டுக் கடன் வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக சீனா உள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் நிலுவையாகவு ள்ள வெளிநாட்டுக் கடனில் 10%க்கும் சிறிது அதிகமாக சீனாவிடமிருந்துபெற்றதாகும்.
2018 ஆம் ஆண்டில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய நிதி வசதியை [எவ் ரி எவ் எவ் ) இலங்கை பெற்றிருந்தது , மேலும் 2020 மார்ச்சில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைஎவ் ரி எவ் எவ்வாக பெற்றுக்கொண்டது.
சீனாவின் மக்கள் வங்கியுடன் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிகரானயுவான் பரிமாற்றத்தை இலங்கையும் பெறக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் நிவார்ட் கப்ரால் டிசம்பர் 20 அன்று தெரிவித்திருந்தார்.. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கானகொடுப்பனவை செலுத்துவதற்கு இதனைப் பயன்படுத்தலாம்.
மொரமுதலியின் கூற்றுப்படி, 2010-2020 தசாப்தத்தில், இலங்கையில் அதிகதொகை வெளிநாட்டு முதலீட்டாளராக சீனா இருந்தது. தொற்றுநோய்க்கு மத்தியிலும் சீனா இலங்கைக்கு அதிகளவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாகத் தொடர்கிறது.
பல ஆண்டுகளாக, இலங்கை தனது ஆடைத் தொழிலுக்கான மூலப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் முக்கிய ஆதாரமாக சீனா மாறியுள்ளது, ஆடைகள் ஏற்றுமதிதுறையிலுள்ள முக்கியமானவையாகும்.
நியூஸின் ஏ சியா