பிலிப்பைன்ஸ் சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 ஐக் கடந்தது

0
121
Article Top Ad

பிலிப்பைன்ஸை தாக்கிய ராய் சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 82 பேர் காணாமற்போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சூறாவளியினால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 1,147 ஆக பதிவாகியுள்ளது.

5,30,000-இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சூறாவளி அனர்த்தத்தினால் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயத்துறைக்கு 459 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.