இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு ‘நுசாந்த்ரா’ என பெயர் சூட்டப்பட்டது!

0
146
Article Top Ad

இந்தோனேஷியாவின் புதிய தலைநகருக்கு நுசாந்த்ரா Nusantara என பெயரிட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜகார்த்தா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சவால்களை விடுவிப்பதற்கும், செல்வத்தை மறுபங்கீடு செய்வதற்கும் 2019இல் இந்தோனேசியாவின் தலைநகரை மாற்றுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி ஜோகோ விடோடோ முதலில் அறிவித்தார்.

தொற்றுநோய் காரணமாக இந்த நடவடிக்கை தாமதமானது,இந்தநிலையில் தற்போது இந்த புதிய பெயர் 80க்கும் மேற்பட்ட விருப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் இது இந்தோனேசியாவின் புவியியலைப் பிரதிபலிப்பதால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது சர்வதேச அளவில் சின்னமாக இருந்தது என்று தேசிய வளர்ச்சி திட்டமிடல் அமைச்சர் சுஹார்சோ மோனோர்ஃபா கூறினார்.

இந்த அறிவிப்பு, 10 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான ஜகார்த்தா மீதான சுமையை குறைக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.

புதிய தலைநகரை உருவாக்க இரண்டரை லட்சம் ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வரும் 2024ஆம் ஆண்டு நுசாந்த்ரா புதிய தலைநகர் மற்றுமின்றி நிறுவனங்கள், வெளிநாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான இருப்பிடமாக இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது

தீவுக்கூட்டம் முழுவதையும் குறிக்க நுசந்தரா பயன்படுத்தப்படுவதால், தேர்வு குழப்பமானதாக இருக்கலாம் என்று சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். கலிமந்தனில் புதிய தலைநகரம் கட்டப்படும்போது பழைய ஜாவானியச் சொல்லான நுசன்தாரா ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று மற்றவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

செவ்வாய்கிழமையன்று புதிய தலைநகர் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு இந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கலாம். 2024ஆம் ஆண்டுக்குள் புதிய தலைநகரை கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் கீழ், ஜகார்த்தா நாட்டின் வணிக மற்றும் நிதி மையமாக இருக்கும். ஆனால் அரசாங்க நிர்வாக செயற்பாடுகள் ஜகார்த்தாவிலிருந்து வடகிழக்கே சுமார் 2,000 கிமீ (1,250 மைல்) கிழக்கு காலிமந்தனுக்கு நகரும். புதிய தலைநகரம் வடக்கு பெனாஜாம் பாசர் மற்றும் குடாய் கர்தனேகரா பகுதிகளில் அமையும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையானது கிழக்கு காளிமந்தனில் மாசுபாட்டை விரைவுபடுத்தும் மற்றும் ஒராங்குட்டான்கள், கரடிகள் மற்றும் நீண்ட மூக்கு குரங்குகளின் இருப்பிடமான மழைக்காடுகளின் அழிவுக்கு பங்களிக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

2050ஆம் ஆண்டுக்குள் தற்போதைய தலைநகர் ஜாகர்தா முற்றிலும் நீருக்குள் மூழ்கி விடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.