உக்ரேய்னில் பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் ஆரம்பம்: புடினை சந்தித்து பிரான்ஸ் ஜனாதிபதி பேச்சுவார்தை!

0
156
Article Top Ad

உக்ரேய்ன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் சர்வதேச முயற்சிகள் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்தித்து பேச்சுவார்தை நடத்தியுள்ளார்.

மாஸ்கோவில் திங்கட்கிழமை நடந்த பேச்சுவார்தையின் போது, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான பதற்றத்தை தணிப்பது குறித்து விரிவாக பேச்சு வார்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்தையின் பின்னர் கருத்து தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ‘எனது கண்ணோட்டத்தின்படி பேச்சுவார்த்தை அவசியம். ஏனெனில் அது மட்டுமே ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பான, ஸ்திரதன்மையான சூழலை உருவாக்க உதவும். புடினுடனான சந்திப்பு பதற்றத்தைத் தணிப்பதற்கான முதல் படியாகும்’ என கூறினார்.

ஐரோப்பாவின் பாதுகாப்பை கட்டமைத்ததில் பிரான்ஸின் பங்கை புடின் பாராட்டினார். உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததற்காக மக்ரோனையும் அவர் பாராட்டினார்.

மத்தியஸ்த முயற்சியின் அடுத்தகட்டமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்  செவ்வாய்க்கிழமை உக்ரைன் சென்று, அந்த நாட்டின் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் எல்லை அருகே ஒரு இலட்சம் படை வீரர்களை ரஷ்யா நிலைநிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது எந்த நேரமும் ரஷ்யா படையெடுக்கக் கூடும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இதை மறுத்த ரஷ்யா, உக்ரைன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது.

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோ படைகளைத் திரும்பப் பெற வேண்டுமென நிபந்தனை விதித்தது. ஆனால், அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவின் கோரிக்கைகளை நிராகரித்தன.