மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் மாற்றம்

0
120
Article Top Ad

அதிகளவு மின்தேவை காரணமாக இன்று (27) மின்வெட்டை 04 மணித்தியாலம் 30 நிமிடங்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று 3 மணி நேரம் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இன்று மேலும் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, A முதல் L வரையான வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், P முதல் W வரையான வலயங்களில் இன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.